Sunday, 11 February 2018

கேள்வியின் பதில் கண்ணீர்

ஒரு பெரிய பன்னாட்டு நிறுவனத்தில் வேலை பார்க்கும் பெண் ஆனந்தி. திங்கள் முதல் வெள்ளி வரை அலுவலக வேலை. மற்ற இரு நாட்கள் விடுமுறை. அலுவலகத்தில் வேலைக்கு சேர்ந்த புதிதில் தன் நண்பர்களுடன் சேர்ந்து விடுமுறையில் அனாதை ஆசிரமம் செல்வது சிறு சிறு உதவிகள் செய்வது போன்றவற்றில் தனது நேரத்தை செலவழித்தாள். அவ்வாறு செய்யும் போது தனக்கு கிடைத்த ஒரு மன நிம்மதியை அவளால் வார்த்தைகளால் விவரிக்க முடியாது.

வேலைக்கு சேர்ந்து மூன்று ஆண்டுகள் ஆகின்றன. தனது பெற்றோர்கள் பார்த்த மணமகனுக்கு கழுத்தை நீட்ட இன்னும் 2 மாதங்களே இருந்தது. தனது வருங்கால கணவனிடம் கைபேசியில் பேசுவது அவளுக்கு வழக்கமாகி விட்டது.

ஒரு மாலை வெள்ளிக்கிழமை. ஆனந்தி தனது வருங்கால கணவருடன் பேசிக் கொண்டு இருந்தாள். அப்போது அவளுடைய தோழி அங்கே வந்து, ஆனந்தி நாளைக்கு நாங்க எல்லோரும் சேர்ந்து அருகில் உள்ள முதியோர் இல்லம் செல்கின்றோம். நீயும் வருகிறாயா??? என்றாள். ஆனந்தி வருகிறேன் என்று தலையை ஆட்டி விட்டு பேச ஆரம்பித்தாள்.

மறுநாள் முதியோர் இல்லம். நண்பர்கள் இல்லத்தில் இருந்த பெரியவர்களுடன் விளையாடிக் கொண்டு இருந்தனர். ஆனந்தி தனது வருங்கால கணவர் கைபேசியில் அழைத்தார். ஆனந்தி வெளியே வந்து பேசத் தொடங்கினாள். இரண்டு நிமிடத்தில் ஆனந்தி பக்கத்தில் ஒரு பாட்டி வந்து உட்கார்த்தார். அவர்களைப் பார்த்ததும் ஆனந்தி நான் கொஞ்ச நேரம் கழித்து பேசுகிறேன் என்று சொல்லி கைபேசி இணைப்பை துண்டித்தாள்.

அந்த பாட்டி யாரும்மா உன் புருஷனா? என்று கேட்டார். ஆனந்தி வெட்கத்துடன் சிரித்து கொண்டே ஆமா அம்மா, வருங்கால கணவர் என்றாள்.  உடனே அந்த பாட்டி ரொம்ப சந்தோஷமா இருக்கு  ம்மா. நீ நல்லா இருக்கணும் என்று வாழ்த்தினார். Thanks பாட்டி என்ற ஆனந்தி சிறிது நேரம் அமைதியாக இருந்தாள்.

அந்த பாட்டி கொஞ்ச நேரம் கழித்து தனது கைப்பையை எடுத்து அதில் ஒரு போட்டோவை எடுத்து ஆனந்தியிடம் கொடுத்தார். அதில் இளம் வயது ஜோடியின் போட்டோ இருந்தது. யார் பாட்டி இது என்றாள் ஆனந்தி. அதற்கு அந்த பாட்டி சிரித்துக்கொண்டே, இது என்னோட மகன். அது என்னோட மருமகள்.  என்னோட மகன் ரொம்ப நல்லவன். சின்ன பையன். அவனை என்னை மாதிரி யாராலும் பார்த்துக்க முடியாது. சின்ன வயசுல அவனோட அப்பா  கடவுள் கிட்ட போனதுக்கு அப்புறம் நான்தான் அவனை பாத்துகிட்டேன். அவன் பெரியவன் ஆனதும் என்ன மாதிரியே அவனை நல்லா பாத்துக்குற பொண்ணா பாத்து கல்யாணம் பண்ணி வச்சேன். என்னோட மருமகளும் ரொம்ப ரொம்ப நல்லவள்.  பாவம் அவளால் என்னையும் என் புள்ளையையும் ஒரே நேரத்துல பாத்துக்க முடியல. அத்தையை நல்ல பாதுக்கணும்னு என்னை இங்கே அனுப்பி வச்சுட்டா. உன்னை பார்க்கும் போது என்னோட மருமகளை விட ரொம்ப நல்ல பொண்ணு மாதிரி தெரியுது. நீ கல்யாணத்துக்கு அப்புறம் உன் புருசனையும் பாதுக்குவ அப்புறம் உன்னோட மாமனாரையும் மாமியாரையும் பாதுப்பனு தெரியும். என்ன நா சொல்றது சரிதானே என்று அதே மாறாத சிரிப்புடன் ஆனந்தியிடம் கேட்டார். ஆனால் ஆனந்தியின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது......


சிகப்பு மஞ்சள் பச்சை

          சென்னையின் மிக முக்கியமான இடம். Signalஇல் மற்ற வாகனச் சத்தங்களின் நடுவே மிகவும் அமைதியாக தன் மகனின் செயல்களை ரசித்தவாறு முன் இருக்கையில் அமர்ந்திருந்தார் அகிலன். தான் செய்யும் செயல்களை பார்த்து தனது மகனும் அதே செயல்களை செய்வதை உணர்ந்த அகிலன் தன்னுடைய செயல்களில் மிகவும் கவனமாக இருப்பார்.
AC  கார் என்பதால் வெளியில் நடக்கும் சச்சரவுகள் தெரியாமல் விளையாடி கொண்டு இருந்தான் அகிலனின் மகன் கேஷவ். அகிலனின் பக்கம் கார் கதவை தட்டும் சத்தம். வெளியில் ஒரு சிறு குழந்தை. கையில் ஒரு உடைந்த தட்டு. அணிந்திருக்கும் உடையை பார்த்ததும் அந்த குழந்தையின் கஷ்டம் அகிலனுக்கு தெரிந்தது. பின்னால் திரும்பி தனது மகனை பார்த்தார் அகிலன்.

          வெளியில் இருந்த அந்த குழந்தை "ஐயா சாப்பிட்டு 3 நாள் ஆச்சு. தர்மம் பண்ணுங்க" என்று கேட்டது. அகிலன் தன் மகனை பார்த்து கொண்டே அந்த குழந்தைக்கு தனது pocketஇல் இருந்து 10 ருபாய் எடுத்து கொடுத்து விட்டு தன் மகனைப் பார்த்து சிரித்தார். கேஷவ் தன் தந்தையைப் பார்த்து சிரித்தான்.

          தன் மகனுக்கு ஒரு நல்ல விஷயத்தை சொல்லிக் கொடுத்த சந்தோசத்தில் வீட்டிற்க்கு வந்த அகிலன் தனது மகனை ரூமில் விளையாட விட்டு விட்டு குளித்து விட்டு வந்தவருக்கு அந்த காட்சியைப் பார்த்து அதிர்ந்து போய் விட்டார். அவர் கண்ட காட்சி. கேஷவ் கண்ணாடி முன்பு நின்று கொண்டு signalஇல் பார்த்த குழந்தையைப் போல நடித்து பார்த்துக் கொண்டிருந்தான். உடனடியாக கேஷவ் பக்கத்தில் சென்று என்னாச்சு கேஷவ் ஏன் இப்படி நடிச்சிட்டு இருக்க??? என்று கேட்டார். அப்பா எனக்கும் பசிச்சதுனா இப்டிதான கேக்கணும்??? என்று கேஷவ் தனது மழலைக் குரலில் கேட்டான்.

          அகிலன் தன் மகனைப் பார்த்து உனக்குப் பசித்தால் நீ உன்னிடம் இருக்கும் பணத்தை வைத்து வாங்கி சாப்பிடு என்றார். ஆனால் என்னிடம் பணம் இல்லை என்றால் என்ன பண்ணுவது என்றான். நீ நல்லா படிச்சி நல்ல வேலைக்கு போனா உன்னிடம் பணம் இருக்கும். நீ நினைத்ததை வாங்கி கொள்ளலாம் என்று கூறினார். அப்போ படிச்சா பணம் கிடைக்குமா அந்த அக்கா மாதிரி ரூபாய் கேக்க வேண்டாமா என்றான் கேஷவ்.

        தன் மகன் புரிந்து கொண்டான் என்ற  சந்தோசத்தில் அகிலன் ஆமா கேஷவ், நீ படிச்சா அந்த அக்கா மாதிரி பிச்சை எடுக்க வேண்டாம் என்றார். கொஞ்ச நேரம் அமைதியாக இருந்த கேஷவ் தன் அப்பாவைப் பார்த்து (புரியதவனாக) படிச்சா பிச்சை எடுக்க வேண்டாம்னா எதுக்காக அந்த அக்காவை படிக்க சொல்லல அப்பா என்று கேட்டான்.

          5 நொடிகள் தன் மகனையே பார்த்து கொண்டிருந்த அகிலன் தான் செய்த தவறு, Signalஇல் பிச்சை எடுத்து கொண்டு இருக்கின்ற குழந்தைகளுக்குத் தேவை பணத்தை விட படிப்புதான் என்று புரிந்து கொண்டார். அன்று முதல் தனக்குத் தெரிந்த NGO உடன் சேர்ந்து தன்னால் முடிந்த அளவுக்கு பிச்சை எடுக்கும் குழந்தைகளுக்கு உதவி செய்து கொண்டு வருகிறார் அகிலன்.

தவணை

              விக்ரம் bikeஇல் எதையோ நினைத்துக் கொண்டு வருகிறான். அவனது மனதில்
(வந்தாரை வாழ வைக்கும் சென்னை. இந்த பரபரப்பான சென்னையில் நானும் ஒரு அங்கம். பொறந்தது வளந்தது படித்தது எல்லாம் தூத்துக்குடி என்றாலும் வேலை கிடைத்தது சென்னையில்தான். இப்பொழுது என் காதில் விழுகிறது அனைத்தும் என் நண்பர்கள் மற்றும் என்னுடன் வேலை செய்பவர்களின் குரல்கள்.)

Friend 1 :Royal enfiled  வாங்கியிருக்கலாம்.
Friend 2 :DUKE super bike. நீ அதை வாங்கிருக்கலாம்.
Friend 3 :மச்சி நம்ம ராஜா 3 மாசத்துக்கு முன்னாடித்தான் R15 வாங்கிருக்கான். Installment ஆஹ் இருந்தாலும். Bike செம look ஆஹ் இருக்கும். நீ அதை கூட வாங்கிருக்கலாம். அதையெல்லாம் விட்டுட்டு இப்டி basic model ல போய் bike வாங்கியிருக்கியே????

             டீ கடையில் வண்டியை நிறுத்தி விட்டு கடைக்குள் சென்று ஒரு டீ என்று மாஸ்டரிடம் சொல்கிறான். அப்பொழுது அவனது நண்பன் ராஜா அங்கே வருகின்றான். ராஜாவை பார்த்ததும் விக்ரம் 2 டீ என்று கூறிவிட்டு தன் நண்பனை பார்த்து,
பேர்ல தான ராஜா ??? ஏதோ இந்த ஊருக்கே ராஜா மாதிரி எப்போ பார்த்தாலும் busy ய வே இருக்குற. என்று நக்கலாக கேட்கிறான். அதற்கு ராஜா, உனக்கென்ன MNC ல work பண்ற. Ac ல job. ஆனா நா அப்படியா??? மார்க்கெட்டிங் job. நா அலயத்தான் செய்யணும்.
டீ மாஸ்டர் இருவரிடமும் டீயை கொடுக்கிறார். இருவரும் டீ குடிக்கும் போது ராஜா விக்ரமை பார்த்து, மச்சான் ஒரு 1000 இருக்குமா என்று கேட்கிறான். விக்ரம் mobile ஐ பார்த்துக் கொண்டே போன வாரம் தானடா salary போட்டாங்க. அதுக்குள்ள என்னாச்சு???  என்று கேட்கிறான். அதற்கு ராஜா credit card ல amount swipe பண்ணிருந்தேன். அதை பிடிச்சிட்டாங்கடா.  இந்த month bike due கட்ட பணம் இல்லடா. நீ இந்த month கொடு. அடுத்த month நா தந்துடுறேன் என்கிறான்.

             பின்பு ராஜா, friends எல்லாம் சொல்லும் போது ஒரு ஆசையிலே நா இந்த bike ஐ எடுத்துட்டேன். இப்போ இதுக்கு due கட்ட முடியாம கஷ்ட படுறேன். முதலிலேயே think பண்ணிருக்கணும். அப்போ விட்டுட்டேன். இப்போ நினைச்சா கஷ்டமா இருக்கு என்கிறான்.
ராஜா சொல்லி முடிக்கும் போது, அவனது mobile இல் message sound கேட்கிறது. அவன் எடுத்து பார்க்கும் போது, விக்ரம்  நாம ஆசை படுறதுல தப்பு இல்லை. ஆனா அது நமக்கு சரியா இருக்குமா?? நம்மால் சமாளிக்க முடியுமா??? இதெல்லாம் முடிவு பண்ணிக்க வேண்டும். உன்னோட வேலைக்கு நல்ல mileage கொடுக்கிற பைக்கை வாங்கிருக்கணும். இப்போ கஷ்டம் யாருக்கு???. என்று கூறி விட்டு, உன்னோட account கு 1000 அனுப்பியிருக்கேன் என்கிறான் விக்ரம்.

ராஜாக்கு விக்ரமிடம் நன்றி சொல்ல, இருவரும் டீ குடித்து விட்டு கிளம்புகின்றனர்.

குறள் 832..

http://www.ytamizh.com/thirukural/kural-832/